Kaaruvagi Seminar

Kaaruvagi Seminar

இளவேனில் ‘காருவகி’ கருத்தரங்கம்
இளவேனில் அவர்களின் எழுத்தில் உருவான காருவகி புத்தகத்தை பற்றிய கருத்தரங்கம் 8/2/2015 மாலை சென்னை சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் நடைப்பெற்றது. கார்க்கி பதிப்பகம் செ. ஜான்போஸ்கோ வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். பாரிவேந்தர், இசைஞானி இளையராஜா, தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரைப்பட தயாரிப்பாளர் வி.ஆர்.குமார், திரை விமர்சகர் தயாரிப்பாளர் கோ.தனஞ்சேயன், பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், ஒளிப்பதிவாளர் பீம்சிங் கண்ணன் ஆகியோர் பங்கேற்று காருவகி புத்தகத்தினை பற்றி பேசினார்கள். இளவேனில் அவர்கள் ஏற்புரை ஆற்றி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் சார்லி மற்றும் அறிஞர் பெருமக்கள், சான்றோர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

புகைப்படத்தொகுப்பு:

Share