Writer Devabharathi’s Asthinapurathu Kadhaigal & Tholar Bala Book Release Function

Writer Devabharathi’s Asthinapurathu Kadhaigal & Tholar Bala Book Release Function

எழுத்தாளர் திரு. தேவபாரதியின் ‘அஸ்தினாபுரத்து கதைகள்’ மற்றும் ‘தோழர் பாலா’ புத்தகங்களின் வெளியீட்டு விழா 01-03-2015 அன்று குன்றத்தூர் லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் நடந்தது.

மு.நெடுமாறன் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்க, குறள்குன்று திரு.ம.குப்புசாமி தலைமையேற்று நடத்தி தந்தார்.

மூத்த நடிகர் திரு. சாருஹாசன் கலந்து கொண்டு ‘தோழர் பாலா’ புத்தகத்தை வெளியீட திரு.கதிரவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து ‘அஸ்தினாபுரத்து கதைகள்’ புத்தகத்தை இயக்குனர் மற்றும்  படத்தொகுப்பாளர் திரு. பீ.லெனின் வெளியீட லிட்டில் ஃப்ளவர் பள்ளியின் தலைமையாசிரியர் & எழுத்தாளர் திரு.லயன் S.ஜான் சேவியர் தங்கராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் தோழர் ஜானகி கிருஷ்ணன், எழுத்தாளர் திரு. வையவன், திரு.கே.பி.அறிவானந்தம்,
கவிஞர் இளம்பிறை, ச.ரோ.வெற்றிச்செழியன், தோழர் திரு.பாபு சிவதாஸ், திரு.V.R.C.B.ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

விழாவின் முடிவில் எழுத்தாளர் திரு. தேவபாரதி ஏற்புரையாற்றினார்கள்.

திரு.கோ.எழில்முத்து நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்புக்கு:


வீடியோ பதிவு:

எழுத்தாளர் திரு. தேவபாரதியின் அஸ்தினாபுரத்து கதைகள், தோழர் பாலா புத்தகங்ளின் வெளியீட்டு விழாவில் நடிகர் திரு.சாருஹாசன் அவர்களின் உரை.


Writer Devabharathi – Speech at Asthinapurathu Kadhaigal Book Release Function
அஸ்தினாபுரத்து கதைகள், தோழர் பாலா புத்தகங்ளின் வெளியீட்டு விழாவில் ஏற்புரையாற்றும் எழுத்தாளர் திரு. தேவபாரதி


 

Mr.Lion S.Jhon Xavier Thangaraj Speech at Asthinapurathu Kadhaigal & Tholar Bala Books Release Function
எழுத்தாளர் திரு. தேவபாரதியின் அஸ்தினாபுரத்து கதைகள், தோழர் பாலா புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் திரு.லயன் S.ஜான் சேவியர் தங்கராஜ் உரையாற்றுகிறார்.


More Videos click the following playlist:

Share