கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது STEELMAN OF TAMILNADU 2015 AWARD

கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது STEELMAN OF TAMILNADU 2015 AWARD

சென்னை மாவட்ட ஆணழகன் சங்கத்தின் சார்பில் குடியரசுதினத்தில் தமிழக அளவில் மாபெறும் ஆணழகன் போட்டி சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது. காலை முதலே அரங்கம் கலைகட்ட தோடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது. சென்னை மாவட்ட ஆணழகன் சங்க சேர்மன் திரு. இரயாபுரம்.R.மனோ அவர்கள் போட்டியினை தொடங்கிவைத்தார். ஐ திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த M. காமராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பத்து பிரிவுகளில் போட்டி நடைபெருகிறது அதில் இறுதி சுற்றில் தெர்ந்தெடுக்கப்படும் முதல் நபருக்கு ரூபாய் 5லட்சம் பரிசாக வழங்கப்படயிருக்கிறது. மாலை 7மணிக்கு நடைபெரும் விழாவில் பரிசு பணத்தை வழங்க நடிகர் சீயான் விக்ரம் அவர்கள் கையால் வழங்க இருக்கிறார். ஸ்கைஜிம் பாபு அவர்கள் பேசும் போது ‘இந்த பரிசு தொகை தான் தமிழக அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் அதிக தொகையாகும், இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்த திரு.இரயாபுரம்.R.மனோ அவர்களுக்கு நன்றி’, என்றார். விருவிருப்பான இந்த போட்டியினை காண கூட்டம் அலைமோதுகிறது. மாலையில் நடைபெரும் விழாவுக்கு இடம் கிடைப்பது கடினம் தான் போல் தெரிகிறது.

ஸ்ருதி செய்திகளுக்காக.
V.ரெத்தினம்.

Share