சான்றிதழ் – விமர்சனம்

சான்றிதழ் – விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்கிறது, ஆனால் அதை அந்த விருதை கிராம மக்கள் வாங்க மறுத்து விடுகிறார்கள். இதனால், ஆத்திரமடையும் அமைச்சர் (ராதாரவி) கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைச்சரின் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னாள் வெள்ளைச் சாமி என்பவரது தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை.

 

வெள்ளை வேட்டி, சட்டை மட்டும் இன்றி உள்ளத்திலும் வெண்மையோடு வலம் வரும் வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி, தனது கிராம மக்களின் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகளில் தடுமாறுகிறார். கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் – நிருபராக வரும் ஆஷிகா அசோகன் ஆகியோரது காதல் காட்சிகள் குறைவு தான் என்றாலும், இருவராலும் படம் குளிர்ச்சியாக இருக்கிறது. மினிஸ்டர் வேடத்தில் வரும் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ரவி மரியா கவனம் ஈர்கிறார்.

 

கேமராமேன் எஸ்.எஸ்.ரவிமாரன் சிவன், பருந்து கோணத்தில் முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை என்று ஸ்டேஜில் உள்ளது.

 

சில பல இலட்சங்கள் செலவில் உருவான ஒரு சினிமா மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியம் என்றும், அப்படி இருந்தால் ஒட்டு மொத்த ஊரே கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கும், என்ற அரிய கருத்தை சின்னஞ்சிறு குறைகளோடு சொல்லியிருந்தாலும், இந்த ‘சான்றிதழ்’ படத்தை ஒரு தடவை பார்க்கலாம்..

Share