அப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி

அப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி

கதைதான் எப்போதும் ராஜா எனதமிழ்சினிமாவில் பலமுறைநிரூபணமாகி இருக்கிறது. அரளிபடமும் அந்தப்பட்டியலில் இடம்பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது.பெற்றோர்கள்தான் ஒரு குழந்தைநல்லவனாக வளர்வதற்கும் தவறானபாதையில் செல்வதற்கும் காரணம்எனும் கருத்தை மையமாக கொண்டுநகர்கிறது அரளி.

சினிமாவில் எப்போதும் மகன்நடிப்பதற்கு ஆசைப்பட்டால்தந்தைதான், கடன் வாங்கியேனும்படம் தயாரிப்பார் ஆனால் இந்தஅரளி பட இயக்குனர் சுப்பாராஜோசற்று வித்தியாசமானவர்தந்தையின் நிறைவேறாத சினிமாகனவை நிறைவேற்ற தனதுதந்தையை கதையின் நாயகனாகவைத்து படம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக மதுசூதனும்,நாயகியாக மஞ்சுளாவும்இவர்களுடன் முக்கியகதாபாத்திரத்தில் இயக்குனரின்தந்தை அண்ணாமலை மற்றும்இயக்குனர் சுப்பாராஜும்நடித்துள்ளார். ராஜேஷ் ஒளிப்பதிவுசெய்துள்ள இந்தப்படத்திற்குஎம்.எஸ்.ஜான் மற்றும் அனில்முத்துக்குமார் இசையமைத்துள்ளார்.விசாகன் படத்தொகுப்பைகவனித்துள்ளார்.

படம் பழிவாங்கும் த்ரில்லராகஉருவாகி இருப்பது ட்ரெய்லரைபார்க்கும்போதே தெரிகிறது.இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர்உள்ளிட்ட பிரபலங்கள்இந்தப்படத்தை வெகுவாகபாராட்டியுள்ளனர்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்கூறும்போது, “எப்போதுமே நான்இப்படிப்பட்ட படங்களைபார்க்கும்போது பேப்பரும் பேணவும்கையில் வைத்துக்கொண்டு அதில்உள்ள குறைநிறைகளைசொல்வதற்காக அவ்வப்போதுகுறிப்பெடுத்துக்கொள்வேன்.ஆனால் அரளி படம் பார்த்தபோதுஎன்னால் கடைசிவரைகுறிப்பெடுக்க முடியவில்லை.காரணம் படம் அவ்வளவு வேகத்தில்செல்கிறது” என்றார்.

நடிகர் நாசர் படத்தை பற்றிசிலாகித்து கூறியதாவது, “இந்தப்படத்தின் மையக்கதைஇதுவரை தமிழ்சினிமாவில்பார்த்திராத ஒன்று எனசொல்லலாம். முற்றிலும்புதுமுகங்கள் நடித்துள்ளஇந்தப்படத்தில் மையகதாபாத்திரமாக குழந்தைகள் நலகாப்பாளராக நடித்துள்ளஅருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்கவைக்கிறது. இடைவேளைக்குப்பின்கதை எப்படி போகும் என்பதைஅனுமானிக்கவே முடியவில்லை”என்றார்.

நடிகர் ராதாரவி படத்தை பற்றிபாராட்டி கூறும்போது, “திருக்குறளில்இரண்டு அடியில் விஷயத்தைசுருக்கமாக சொல்வது போலஇந்தப்படத்தில் கதையைசொல்லியிருக்கிறார்கள். கதைநம்மை கலங்க வைக்குது…மதுநன்றாக நடித்துள்ளார். வயதானகேரக்டரில் நடித்துள்ளவரின்நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்..என்னா நடிப்பு.? தமிழ்சினிமாவுலகைகாப்பாற்றவேண்டும் என்றால்இதுமாதிரி படங்கள்வெளிவர்றதுக்கு நாம துணையாநிக்கணும்” என்கிறார்.

இயக்குனர் பாலாஜி தரணீதரன்கூறும்போது, “அரளிங்கிறடைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியானஅர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்..பின்னணியில் ஒரு வலுவானகதையை எடுத்துக்கொண்டு அதைஅழகாக காட்சிப்படுத்திஇருக்கிறார்கள்” என்றார்.

இயக்குனரும் நடிகருமான சந்தானபராதி, “இந்தப்படத்தில் ‘பிகாலே’அதாவது ஆன் விபச்சாரம் என்கிறபுது விஷயத்தை கூறியுள்ளார்கள்..நம் கலாச்சாரத்துக்கு புதுசுஎன்றாலும் அமேரிக்கா போன்றநாடுகளில் இதுநடந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படிஇதில் சிக்கி மீள்கிறான் என்பதைஅருமையாக சொல்லியிருக்கிறார்க”என பாராட்டியுள்ளார்.

நடிகர் கரிகாலன் கூறும்போது, “மகனுக்காக படம் எடுக்கசினிமாவுக்குள் வரும் அப்பாக்களைபார்த்திருக்கிறோம்.. ஆனால்இந்தப்படத்தின் இயக்குனர்சுப்பாராஜ், தனது தந்தைக்காக படம்எடுக்கவந்து, அவரையே மையமாகவைத்து படத்தை எடுத்திருக்கிறார்என்பது தமிழ்சினிமாவுக்கு புதியமுயற்சி” என்றார்.

நடிகர் அழகு கூறும்போது, “பொதுஒரு படத்தை பார்க்கும்போதுக்ளைமாக்ஸ் நெருங்குபோதுதான்விறுவிறுப்பு கூடும்.. ஆனாஇந்தப்படத்தில் இடைவேளையில்இருந்தே நம்மளை அப்படியேதூக்கிட்டு போகுது” எனபாராட்டியுள்ளார்.

Share