மாயா வெற்றியினை தொடர்ந்து ”ஜாக்சன் துரை” யை வாங்கியது தேனாண்டாள் பிலிம்ஸ்

மாயா வெற்றியினை தொடர்ந்து ”ஜாக்சன் துரை” யை வாங்கியது தேனாண்டாள் பிலிம்ஸ்

பர்மா படத்தினை இயக்கிய தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். “ஜாக்சன் துரை” படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது.

sibiraj-jakdh

பேய் படங்களாக பார்த்து பார்த்து வெளியிடும் “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பெருந்தொகைக்கு தமிழ்நாடு திரையிடல் உரிமையை வாங்கியிருக்கிறது. விரைவில் பிரமாண்டமான “ஜாக்சன் துரை” படத்தை திரையில் காணலாம்.

Share