இரண்டு படங்களின் அட்வான்ஸ் ஒரு கோடி ரூபாயை கொண்டு கலாம் அறக்ககட்டளை தொடங்கினார் – ராகவா லாரன்ஸ்

இரண்டு படங்களின் அட்வான்ஸ் ஒரு கோடி ரூபாயை கொண்டு கலாம் அறக்ககட்டளை தொடங்கினார் – ராகவா லாரன்ஸ்

வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ & ‘நாகா’ என இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை வைத்து கலாம் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

‘ரசிகர்கள் தரும் பணத்தை அவர்களுக்கு திருப்பி தரும் முயற்சி இது. எனக்கு முன் பணமாக கிடைத்த ஒரு கோடி ரூபாயை வைத்து ‘கலாமின் காலடிச்சுவட்டில்…’ என்கிற புதிய அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளேன். இதன் மூலமாக 100 இளைஞர்களின் படிப்புக்கு உதவப் போகிறேன். நூறு இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்துவிடுவேன். அவர்கள் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவலாம், என்று விழாவில் கூறினார் ராகவா லாரன்ஸ்.

 

Share