பாகுபலி திரையிட்ட மதுரை திரையரங்கத்தின் மீது குண்டு வீச்சு !

பாகுபலி திரையிட்ட மதுரை திரையரங்கத்தின் மீது குண்டு வீச்சு !

மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள ‘தமிழ், ஜெயா’ மல்டிப்ளக்ஸ் திரையரங்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி தமிழ் பதிப்பு திரைப்படம் ஒடுகிறது. இன்று காலை 11:30 மணியளவில் பெட்ரோல் குண்டு ஒன்று அத்திரையரங்கத்தின் மீது வீசப்பட்டது. அதில் பாகுபலி திரைப்படத்தின் போஸ்டர் மட்டும் எரிந்தது, இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை.  புரட்சிபுலிகள் அமைப்பின் துண்டுபிரசுரம் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த சில நாட்களாக இப்படத்துக்கு எதிரான போரட்டங்களை நடத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Share