அக்ஷய் குமார் மற்றும் ராஜ் குந்த்ராவுடன் இணையும் “சியான்” விக்ரம்

அக்ஷய் குமார் மற்றும் ராஜ் குந்த்ராவுடன் இணையும் “சியான்” விக்ரம்

தமிழகத்தின் முதல் முறையாக பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணி நேர விட்டு உபயோக பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனல் “பிக் டீல் டீவி”யின் முதல் பார்வை இன்று வெளியிடப்படுகிறது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார், பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் பிரபல நடிகர் சியான் விக்ரமுடன் கைகோர்த்து தங்களது இரண்டாவது மற்றும் தமிழகத்தின் முதல் முறையான பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணி நேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனல் “பிக் டீல் டீவி”யின் முதல் பார்வையை வெளியிடவுள்ளனர். இந்த சேனல் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் அனைத்து DTHச்சிலும் தமிழ்கம் முழுவதும் இலவசமாக பார்க்க முடியும்.

இச்சேனலில் அன்றாட வாழ்க்கைமுறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், உடை, உடல் நலம் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகியவை முதன்மையாக விற்கப்படும்

பிக் டில் டிவி நிறுவனர் ராஜ் குந்த்ரா விழாவில் பேசுகையில், “6 மாத காலத்திற்க்குள் எங்களது இரண்டாவது ஹோம் ஷாப்பிங் சேனல் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இம்முறை தமிழகத்தில் பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணி நேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனல் “பிக் டீல் டீவி”யை பிரபல நடிகர் சியான் விக்ரமுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிக் டீல் டிவியில் சரியான மற்றும் நம்பகத்தன்மையான பொருட்கள் சிறந்த விலையில் விற்கப்படும். எங்களது தலைமை நிர்வாகி மற்றும் துணை உரிமையாளர் கௌரவ் கர்க் இச்சேனலை தென்னிந்தியாவில் சிறந்த மூறையில் செயல்படுத்துவார்.

பிக் டில் டிவி தலைமை நிர்வாகி மற்றும் துணை உரிமையாளர் கௌரவ் கர்க் விழாவில் பேசுகையில், “தமிழகத்தின் முதல் முறையாக பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணி நேர விட்டு உபயோக பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனல் “பிக் டீல் டீவி” வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம், அதிலும் சியான் விக்ரம் எங்களின் பங்குதாரராக பிக் டில் டீவிக்கு உறுதுனையாக செயல்படுவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பிக் டீல் டீவியில் ருபாய் 999 முதல் 8999 வரை சிறந்த மற்றும் நேர்த்தியான பொருட்கள் விற்கப்படும். வாடிக்கையாளர்களின் சேவையே எங்களின் முதல் குறிக்கோள், ஆகையால் எங்கள் பிக் டீல் டீவியில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் தரம் பரிசோதனை செய்யப்பட்டு அனைத்து பங்குதாரர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே விற்கப்படுகிறது”.

விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் பேசுகையில், “பிக் டில் டிவி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் சிறபான சலுகைகளை நேர்த்தியான பொருள்களுக்கு அளித்து வருகிறது. ஹிந்தி மார்கெட்டில் பெரும் வரவேற்ப்பை பெற்று தற்போது தமிழகத்தில் தனது சேவையை துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”.

பிக் டில் டிவி துணை உரிமையாளர் மற்றும் தமிழகத்தின் பிக் டில் டிவி தூதுவரான சியான் விக்ரம் பேசுகையில், “முதல் முறையான பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணி நேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனல் “பிக் டீல் டீவி”யை தமிழகத்தில் அறிமுகம் செய்வது மிகவும் உற்சாகமளிக்கிறது. இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனது ஒப்புதலின் பேரில் விற்பனை செய்யப்படவுள்ள பொருள்களும் இன்னும் சில தினங்களில் இச்சேனலில் விற்கப்படும். மேலும் இச்சேனலில் வாடிக்கையாளர்களின் சேவையை அறிந்து கொண்டு மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வோம். எங்களின் பிக் டீல் டீவியில் உங்களுக்கு கிடைப்பது பெஸ்டஸ்ட் மட்டுமே”.

Share