ஜிகிர்தண்டா மொழிமாற்றதுக்கு தடை வாங்கினார் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகிர்தண்டா மொழிமாற்றதுக்கு தடை வாங்கினார் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகிர்தண்டா திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

IMG_0478

ஜிகிர்தண்டா திரைப்படத்தின் ஹிந்தி மொழிமாற்று உரிமையில் தயாரிப்பாளர் கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்டி, ஹிந்தி மொழிமாற்று உரிமத்தில் 40% எனக்க தர வேண்டும் என்று ஒப்புகொள்ளபட்டது. ஆனால், சமீபத்தில், S.கதிரேசன் அவர்கள் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்த பிரச்சனையை பதிவு செய்தேன். மேலும், இந்த பிரச்சனையை நான்கு சுவற்றுக்குள் முடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல முறை பேச்சு வார்த்தை நடைபெற்றது, ஆனால் திரு. S.கதிரேசனின் ஒத்துழையாமையால் சுமுக முடிவுக்கு வர முடியாமல் போனது. பின்னர்,  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு, வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். இப்பொழுது, சென்னை உயர் நீதிமன்றதில் இருந்து, இத்திரைப்படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்க்கு தடை விதித்துள்ளனர்.

Share