ரெமோ நன்றி அறிவிப்பு மேடையில் கண்ணீர்விட்ட சிவகார்த்திகேயன்

ரெமோ நன்றி அறிவிப்பு மேடையில் கண்ணீர்விட்ட சிவகார்த்திகேயன்

உலகமெங்கும் வெற்றிவாகை சூடி வசூலை வாரிக்கொண்டிருக்கும் ரெமோ படத்திற்க்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது 24AM Studios நிறுவனம். பிரமாண்டமாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் நாயகன் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பேச்சை ஆரம்பித்து அரங்கத்தை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். கடைசியாக இப்படத்தின் தயாரிப்பாளர் R.D.ராஜாவை பற்றி பேச ஆரம்பிக்கும் போது தன்னையறியாமல் உடைந்து அழ ஆரம்பித்தார். அரங்கத்தில் இருந்த அத்தனை பேருக்கு கண் கலங்கியது. சாதாரணமாக இருந்து இன்று ஒரு நட்சத்திர நாயகனாக வளர்ந்துவிட்ட சிவகார்த்திகேயனை தனது வீட்டில் ஒருவராக தான் அனைவரும் காண்கிறார்கள். சிவாவின் இந்த வெற்றிக்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பு சாதரானமானது அன்று. இன்னும் அவர் பல வெற்றிகளை குவிப்பார். மக்கள் உங்கள் பக்கம் சிவா…

Share